50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல்
சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி.
நான் தமிழ் பதிவு போட அரம்பித்தது மார்ச் மாதம். இது வரை நான் இரு
பதிவுகளுக்கான இடைவெளியாய் 6 நாட்கள் விட்டது இல்லை, எந்த ஒரு பதிவும் போட ரொம்ப நேரம் எடுத்துகிட்டதும் இல்லை.
அவரு ரொம்ப பிஸியா இருந்த நேரத்திலும் கூட ( காரணம் அவரு அன்றைக்கு
நாமினேஷன், கட்சி கேம்பெயின் என்று சரியாக உறங்காமல், உண்ணாமல் பிஸியாக இருந்த நேரத்தில் எனக்கு இந்த பேட்டி கொடுத்தது அவரின் பெரிய மனசு, முதலில் அவரு சொன்ன வார்த்தை ஸாரி உங்கள கொஞ்சம் காத்திருக்க வைத்துவிட்டேன், ஒருமனிதன் ஸாரி கேட்க பெரிய மனசு வேணும், பெரும்பாலான மக்களிடம் அது இல்லை)
நான் ஏரகுடி என்ற கிராமத்துக்கு சனிக்கிழ்மை மதியம் சென்று இருந்தேன். திருச்சி துறையுர் தாண்டி இருக்கு... அங்குள்ள கோவணம் கட்டின என் கடவுள், விவசாயி மற்றும் சில பொது மக்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது தம்பி உங்க வோட்டு யாருக்கு, எங்க ஊருல அடுப்பு கொடுத்தாரு கலைஞர் அவருக்கு என்று ஒரு பல்லு இல்லா பாட்டியும், ஆனா என் சுவத்தில இரட்டை இலை வரஞ்சி வச்சிடாங்க இரவுல கொல்லேல போறவங்க
ஒரு தாத்தா என் வோட்டு இரட்டை இலைக்கு தான் என்று சொன்னார்.இன்னொரு மெட்டர் சொன்ன போது எனக்கு மிக பெரிய அதிர்ச்சி, தம்பி தென் சென்னையில் உங்கள மாதிரி ஒரு இளைஞர் நிக்குறாமே? நாங்கஅங்க இல்லை, ஆமா அவரு அம்மா இட்லி கடை வச்சி படிக்க வைச்சாங்களாமே என்றும்குடிசையில் இருக்கிறார் என்று சொன்னார்கள் 4 பேரு எல்லாம் வயதான கிராம மக்கள், அவர்களுக்கு அவரை பற்றி ரொம்ப தெரியாவிட்டாலும் அவரு பெயர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சி, அப்புறம் அவரை பத்தி நான் இன்னும் சொல்லி,
அவரு அவ்வளவு பணம் வைத்துமா குடிசை என்று என் கதை கேட்ட பிறகு சொனனார்கள், ஹ்ம்ம் நம்ம பதிவுல அவர பத்தி சொன்னதுக்கு எதிர் பதிவுகளாய் ஒரு சில அறிவுஜீவிகள் சப்ப கட்டு கட்டினதையும் சொன்னேன்,
என்னப்பா சின்ன பசங்க நீங்க எல்லாம் ஒண்ணா இருந்தா அதுவே ஒரு நல்ல மாற்றம் என்று அந்தபாட்டிக்கும் தாத்தாவுக்கும், விவசாயிக்கும் தெரிந்ததும் கூட இவங்களுக்கு தெரியலயே
ஆமா உங்களுக்கு எப்படி அவர பத்தி தெரியும் என்றேன். அதற்க்கு அவங்க அங்கே உள்ள ஒரு 11 ஆம் வகுப்பு படித்த ஒரு இளைஞனை பத்தி சொன்னாங்க. டேய் சரவணா இங்க வாடா.. தம்பி கூப்பிடுது என்றார்கள்.
அவரிடம் பேசிய பிறகு தான் தெரிந்தது அவருக்கு ஜீனியர் விகடன் மூலமாய் இவரை பற்றி தெரிய வந்ததாம் .அவரு சொல்லிய தாக்கதை தாத்தகளிடமும் பாட்டிகளிடமும் பார்க முடிந்தது .
அவர்கள் கண்ணில் நாங்க இருக்கும் போதே நல்லதொரு தமிழகத்தை பார்க்க மாட்டோமோ என்ற ஏக்கத்தை பார்த்தேன்.
அவர்களின் சொத்து எல்லாம் நிலம், ஒரு ( கார )குடிசை வீடு.
திருச்சி வந்தவுடன் சரத்துக்கு போன் போட்டு.
அவரிடம் இதை பற்றி சொன்னேன் ஒரு கிரமத்தில் உங்கள் பெயர் தெரிந்து இருக்கு அதுவே ஒரு வெற்றி சரத் என்று. இனி இந்த வோட்டுகள் எல்லாம் சும்மா.
என்ன பொருத்த வரை அவர் வென்று விட்டார் ஒரு இரட்டை இலை, திரவாட கட்சிகள் மட்டும் தெரிந்த மக்களிடம் இன்று ஒரு இளைஞனை பற்றி தெரிந்து இருக்கிறது. இன்று 4 பேருகாவது தெரிந்தது, நாளை 4 கோடி பேருக்கும் தெரியும் .... ஆனந்தம் மக்கா
சரி இனி அவரது பேட்டி... ( இதையும் படித்து நொல்ல சொல்லி பதிவு போடும் பதர்கள் இருப்பார்கள் அவர்களை பற்றி கவலை இல்லை )
# சரத் நிறைய இளைஞர்களிடம் ஒரு நெருப்பை பற்ற வைத்து இருக்கிறார் என்றால் அது மிகை அல்ல, ஆனால் சமான்ய மக்களிடம் சில கேள்விகள் இருக்கின்றது. அவர்களது மனதில் உள்ள கேள்விகளை சக்கரைக்கு அனுப்ப சொல்லி இருந்தோம். மெயிலிலும் பின்னூட்டத்திலும் வந்த கேள்விகள் நூற்றுக்கணக்கானவை, ஆனால் எல்லாம் ஒரே வகையராவை சேர்ந்தது.
ஆதலால் எல்லா கேள்விகளும் வரும் படியாய் நல்ல கேள்விகளை தேர்ந்து எடுத்து இங்கே உங்களுக்கு பேட்டியாய் கொடுத்தூள்ளோம்#
இனி பேட்டி ...
வணக்கம் சரத்,
உங்களது ஓய்வில்லாத நிகழ்ச்சி நிரலிலும் இந்த நேர்காணலுக்கு
ஒத்துக் கொண்டதற்கு முதற்கண் நன்றிகள்.
நேர்காணலை தொடங்குவோமா?
சரத் : ஆரம்பிக்கலாமே.
வணிகத்தில் மிகப் பெரிய வெற்றியைக் கண்ட பிறகு, ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்?
நான் நாற்பது வயது அடையும் போது அரசியலில் நுழையலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். அதற்குள் எனது நிறுவனத்தை ஆயிரம் - இரண்டாயிரம் கோடி ஈட்டும் தொழில் நிறுவனமாக உருவாக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இப்போது சமுதாயத்தில் நடப்பவற்றை பார்த்து என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் எனது திட்டத்தை 12 வருடங்கள் முன்னதாக்கி விட்டேன்.
” மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் போது தான் நான் தேர்தல் அரசியலில் இறங்கி, சமூகத்தில் இருக்கும் அனேக மக்களை சென்றடைய முடிவு செய்தேன்".
முதலில் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பின்மை தான் ஒரு பிரச்சினை என்று நினைத்தேன். ஆதலால் எனது நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கினேன்.
ஆனால் பிரச்சினை அரசியல் தான் என்று பிறகு உணர்ந்தேன். எனதைப் போல நூறு நிறுவனங்களை உருவாக்க, ஒவ்வொன்றும் ஒரு லட்சம் வேலைகளை உருவாக்க, நான் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்பினேன்.
உங்களது தன்னேற்பு திட்டம் என்ன?
ஏழ்மை இல்லாத இந்தியா.
அனைவருக்கும் கல்வி.
வலிமையான இளைஞர் மன்றங்கள். சேரிகளையும், சிறுதொழில் நிறுவனங்களையும் முன்னேற்றும் பயனுள்ள அரசாங்க திட்டங்கள்.
அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களுக்கு உள்ள சமூகப் பணி அனுபவத்தைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஊழியர்கள் அவர்களது கனவுகளை அடைவதும், அவர்களது குடும்பங்களைத் தாங்கவும் உதவுவது தான் எனது தொழிலின் மைய நோக்கம்.
850 நாட்கள் தொழில்முனைவர் அனுபவத்தில், 350 நாட்கள் இளைஞர்கள் பல
நிறுவனங்களை தொடங்க ஊக்குவித்தலிலும் அறிவுரை கூறுவதிலும் நான் செலவு செய்தேன். ( மீன் பித்து கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவர்களே மீன்களை பிடித்துக்கொள்வார்கள் என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வந்தது)
ஒரு மிகப் பெரிய தொழில் முனைவரை விட நூறு சிறிய தொழில் முனைவோர்
சமூகத்துக்காக உழைப்பது சிறந்தது.
தேர்தலில் வெற்றி பெறுவீர்களா?
ஆம், வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. இளைஞர் சக்தியில் நான்
நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால்,மாற்றம் தொடங்க ஆரம்பிக்கும்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உங்கள் நிலை என்னவாக இருக்கும்?
எனது தொகுதிக்கு தேவையான வேலைகளை திறமையாக செய்வதே மைய நோக்கமாக இருக்கும்.
எனது நேர்மையான கொள்கைகளையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மாற்ற மாட்டேன்.
தேர்தலுக்கு பிறகு உங்கள் தொழிலையும் இணையாக எப்படி செய்வீர்கள்?
தொழில் நெறிகளின்படி தொழிலை செய்ய வேண்டும்.லாபம் மட்டும் எனது குறியாக இருந்திருந்தால், அதை வியாபாரத்திலேயே செய்திருப்பேன்.
வியாபாரம் தனியாகவும், மக்கள் சேவை தனியாகவும் இருக்கும்.
ஒரு வேளை நீங்கள் தோல்வியடைந்தால்?
நான் தோற்றாலும் கூட, அனேக மக்களை ஒரு இளைஞனுக்கு வோட்டு போட
வைத்ததற்காகவும், ஒரு வாய்ப்பு அளித்ததற்காகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நீங்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைத்தால், இளைஞர்கள் சமூகத்தில் ஒரு
மாற்றத்தை கொண்டு வருவார்கள்.
வேறு ஏழ்மையான தொகுதியில் போட்டியிடாமல் சென்னையில் ஏன்
போட்டியிடுகிறீர்கள்?
நான் வேறு தொகுதியில் நின்று தோற்றால் ஏழை மக்களுக்கு எந்த பயனுமிருக்காது. நான் வெற்றி பெற்றால் அவர்களுக்காக உழைக்க முடியும். தென் சென்னையில் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வெற்றி பெற்ற பின் பசியற்ற, சேரியற்ற இந்தியாவை உருவாக்குவதே எனது மைய நோக்கமாக இருக்கும்.
பிரச்சாரத்துக்கு தேவையான நிதியை எப்படி சமாளிப்பீர்கள்?
25 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். நன்கொடைகளை வாங்கும் பணியில் ஏற்கனவே இறங்கி விட்டேன்.
எனது நிறுவனத்திலிருந்து ஒரு ரூபாய் இந்த தேர்தலுக்காக
வராது, பிரச்சார நிதிப்பணம் ஒரு ரூபாய் கூட எனது நிறுவனத்துக்கு செல்லாது
என்பதே எனது வாக்கு.
தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்கள், ஆனால் உங்களது இணையத் தளம் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் இருக்கிறதே?
எனது இணையத் தளம் தற்போது ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழுக்கு மொழி
பெயர்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.
உங்கள் உடையை பற்றி ஒரு ஜாலியான கேள்வி - மேலங்கி ( Coat, Blazer) ஏன் அணிகிறீர்கள்? (சென்னை பயங்கர சூடாக இருக்கிறதே)
(சிரிக்கிறார்)
தொழில் நெறிப்படி எனது தொழிலை செய்கிறேன், அதனைப் போலவே உடையும் அணிகிறேன். அரசியல் சமூக சேவையைப் பற்றியதே தவிர உடையைப் பற்றியது அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
கோடீஸ்வரர் ஆன பிறகும் ஏன் குடிசையில் வாழ்கிறீர்கள்?
நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை என்னால் மறக்க முடியாது.
இத்தனை கோடிகளை சம்பாதித்த பிறகும் எனது பழையகாலத்து வீட்டில் எனது தாயாருடன் இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சியே.
விலையுயர்ந்த வீடு மகிழ்ச்சியான வாழ்க்கையை தந்து விடாது.
லோக் பரித்ரான் உடன் உங்களை ஒப்பிடுங்கள்.
லோக் பரித்ரானின் நோக்கத்தை நான் மதிக்கிறேன். நான் தோற்றாலும் கூட,
மக்களுக்காக தொடர்ந்து உழைக்க முயற்சி செய்வேன். தோல்வி என்பது வெற்றிக்கு செல்லும் படிக்கல்.
உங்களது தேர்தல் அறிக்கை மேலோட்டமாக இருக்கிறதா? இதை எப்படி செயல்படுத்துவீர்கள் என்று சொல்ல முடியுமா?
தயவு செய்து, எனது இணைய தளத்தில் இருக்கும் ஒரு பக்க அறிக்கையை படித்து பாருங்கள்.
இந்த நாள் வரை வந்த தேர்தல் அறிக்கைகளிலேயே, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறிக்கை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.
ஒரு நோக்கத்தை அறச்சார்பான இயக்கமாக, செயல் திட்டமாக மாற்றுவதற்கு என்னுடைய மேலாண்மை அறிவை எப்படி பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை காட்டுகிறது. எனது அறிக்கையை நீங்கள் இங்க தரவிறக்கம் செய்யலாம்.
http://sarathbabu.co.in/in/manifesto/
இளைஞர்களுக்கும், சக்கரை வலைமனை வாசகர்களுக்கும் நீங்கள் கூறும் செய்தி.
நான் அறிந்திராத இளைஞர்கள் பல பேர் வெகு ஆர்வமாக எனக்கு உதவி செய்கிறார்கள், அவர்களது அற்புதமான ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி.
இளைஞர்களே, வாருங்கள் நாம்
ஒன்று சேர்ந்து ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். நீங்கள் எப்போதும் என்னை இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
sarathbabu.southchennai@gmail.com.
மக்களை சென்றடைவதற்கும், அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்காக சுரேஷுக்கும், சக்கரை வலைமனை வாசகர்களுக்கும் முக்கியமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரேஷ் - இந்த அருமையான நேர்காணலுக்காக உங்களுக்கு நன்றி, சரத்பாபு. உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்களது கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி.
இது அனைவருக்கு ஒரு தெளிவான எண்ணத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். சக்கரை பதிவு வாசககர்கள் மற்றும் எனது சார்பாக நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்த பதிவை தமிழில் எழுத்து பிழை இல்லாமல் எழுத உதவியாய் இருந்த நல்ல உள்ளம்
ஜப்பான் ஜோ அண்ணன்
ஜோ ஆனந்த் அவர்களுக்கு சிறப்பு நன்றி
- நன்றி
சுரேஷ்
~சக்கரை~
சரத்பாபுவின் எலக்ஷன் வீடியோ